பரலோகக் கூடாரத்தின் சாயலாக
மோசே கட்டிய பரிசுத்த ஸ்தலமும்
திரைச்சீலையும் இயேசு கிறிஸ்துவைக்
குறிக்கிறது, மேலும் மகா பரிசுத்த ஸ்தலம்
பரலோக எருசலேம் தாயை குறிக்கிறது.
பரிசுத்த ஸ்தலத்தின் வாயிலாக,
தந்தையாகிய தேவன் தாயாகிய
தேவன் இருக்கிறதை உணரும்படி
தேவன் அனுமதித்தார்.
ஆலயத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீரின்
வாயிலாக மனுகுலம் ஜீவனைப் பெற முடியும்
என்று தீர்க்கதரிசிகள் சாட்சியளித்துள்ளனர்.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆலயமான இயேசு,
கூடாரப் பண்டிகையின் கடைசி நாளில்,
ஜீவத்தண்ணீரைப் பெறும்படி சத்தமிட்டு கூப்பிட்டார்,
மேலும் வேதாகமத்தில் பரிசுத்த ஆவியின் காலத்தில்,
பரிசுத்த ஸ்தலம் மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தின்
நிஜமான ஆவியும் மணவாட்டியும், இப்பூமிக்கு வந்து,
ஜீவத்தண்ணீரின் வாயிலாக மனுகுலத்திற்கு
இரட்சிப்பைக் கொடுப்பார்கள்.
அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக்
கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே,
நீர் இதை மூன்று நாளைக்குள்ளே
எழுப்புவீரோ என்றார்கள். அவரோ
தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப்
பேசினார்.
யோவான் 2:20-21
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்;
கேட்கிறவனும் வா என்பானாக;
தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்;
விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை
இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை