புது உடன்படிக்கையின் பஸ்கா வாயிலாக நாம் தேவனிடத்தில் மனந்திரும்பினால், நாம் பாவமன்னிப்பையும் நித்திய ஜீவனையும் பெறுகிறோம். இருந்தாலும், யாராகிலும் தேவனுடைய உடன்படிக்கையில் நிலைத்திராவிட்டால், தேவன் அவர்களைப் புறக்கணிப்பார்; இறுதியாக, சவுல் ராஜா மற்றும் யூதாஸ்காரியோத்து போலவே பிசாசின் ஆவி உள்ளே நுழைவதால், கொடூரமான முடிவை அவர்கள் சந்திப்பார்கள்.
“பஸ்காவை ஆசரித்து தேவனிடத்தில் திரும்புங்கள்” என்று பறைசாற்ற எசேக்கியா ராஜா ஆட்களை அனுப்பியபோது, வடக்கு இஸ்ரவேலின் ஜனங்கள் அவர்களைப் பார்த்து நகைத்து, பரியாசம்பண்ணினார்கள். இறுதியாக, இந்த ஜனங்கள் அழிக்கப்பட்டார்கள். இன்று அதேபோல பதிலளிக்கும் ஜனங்களும்கூட, வடக்கு இஸ்ரவேலின் ஜனங்களைப் போன்ற முடிவையே சந்திப்பார்கள்.
உலகிலே அநேக சபைகள் இருந்தாலும்கூட, தேவனுடைய வாக்குத்தத்தமான பஸ்காவை ஆசரிக்கிற ஒரே சபை மட்டுமே, தேவனிடத்தில் திரும்பியதாகவும், தேவன் அவர்களோடே வாசம்பண்ணுகிற ஆசீர்வதிக்கப்பட்ட சபையாகவும் சொல்லப்பட முடியும்.
அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்… இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; … 2 கொரிந்தியர் 30:1-6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை