ஏதேன் தோட்டத்தின் நியாயப்பிரமாணம், பழைய உடன்படிக்கையின் நியாயப்பிரமாணம்,
இயேசுவினால் ஸ்தாபிக்கப்பட்ட புதிய உடன்படிக்கையின்
நியாயப்பிரமாணம் என இவையனைத்துமே, எதிர்காலத்தில்
மனுகுலத்திற்கு மகத்துவமான மகிமையையும் சந்தோஷத்தையும் வழங்குவதற்காக
எல்லோஹிம் தேவனால் ஏற்படுத்தப்பட்டது.
இன்று, தானியேல் தீர்க்கதரிசி உட்பட அநேக தீர்க்கதரிசிகளின் வாயிலாக,
தேவனுடைய கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும்
விட்டு விலகுவதே அக்கிரமச் செயல், பொல்லாப்பு மற்றும் கலகம் என்று கருதப்படுகிறது.
தேவனுடைய சிறிய போதனைகளையும்கூட நிராகரிக்காமல்,
வேதாகமத்தின்படி செயல்படும்படி அவர்களுக்கு
அறிவுறுத்திய கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள் மற்றும்
தாயாகிய தேவனின் போதனைகளை, தேவனுடைய சபையின்
உறுப்பினர்கள் தங்கள் இருதயங்களில் பதித்துக்கொள்கிறார்கள்.
இயேசு புதிய உடன்படிக்கையின் நியாயப்பிரமாணத்தை ஸ்தாபித்து,
அதைக் கைக்கொள்ளும் முன்மாதிரியை ஏற்படுத்தியதால்,
அவர்கள் ஓய்வுநாள், பஸ்கா உட்பட மூன்று தரங்களின் ஏழு பண்டிகைகளை ஆசரிக்கிறார்கள்.
உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப்
பேசி. . . காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான். . .
ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச்
சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.
வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும்
ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய
பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; . . .
தானியேல் 7:25–27
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்;
அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
ஓசியா 8:12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை