கிறிஸ்து இரண்டாம் தரம் வருவதற்கான காரணம்,
மரணத்தை அழிக்க, அதாவது மனிதகுலத்திற்கு நித்திய ஜீவனைக் கொடுத்து,
அவர்களை பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வதற்காக
என்று வேதாகமமும் தீர்க்கதரிசிகளும் சாட்சியளிக்கின்றன.
பரலோகத்தில் மரணத்துக்குப் பாத்திரமான பாவம் செய்த மனுகுலம்,
நித்திய ஜீவனைப் பெறுவதற்கான ஒரே வழி, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு போலவே,
பஸ்காவின் வாயிலாக இயேசுவின் மாம்சத்தைப் புசித்து, பானம்பண்ணுவதே ஆகும்.
மரணத்தை என்றென்றும் விழுங்கும் பண்டிகையை
தேவனால் மட்டுமே ஆயத்தம் செய்ய முடியும் என்ற ஏசாயா தீர்க்கதரிசனத்தின்படி,
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களை
தேவனாக விசுவாசிக்கின்றனர். மேலும், பஸ்காவின்
வாயிலாக மரணத்தை அழித்தார் என்பதால் பஸ்காவை ஆசரிக்கிறார்கள்.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப்
பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;
நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
யோவான் 6:54
சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை
ஆயத்தப்படுத்துவார் . . . அது தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.
அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; . . .
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக்
காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; . . .
ஏசாயா 25:6–9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை